Saturday, July 30, 2011

உயிர் நி்ரப்பிய உன் பிரியம் - 3


மறு நாள் கிளம்பும் வரை  எதுவும் பேசவில்லை அவளாக பேசினாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் ஒற்றை வார்த்தை பதில் சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார். மறு நாள் காலேஜுக்குள் நுழைந்தவுடன், அவளுக்காகவே காத்திருந்தவன் போல சூர்யா வந்து, படபடவென்று, ” ஜெனி என்னாச்சு ஏன் நேத்து சொல்லாம போயிட்ட கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்னு வந்தது

எனி ப்ராப்ளம்?” என்று மூச்சு விடாமல் கேட்க, சற்று நேரம் அமைதிப் படுத்திக் கொண்டு நிதானமாக ”அப்டிலாம் ஒண்ணும் இல்ல சூரி  டயர்டா இருந்துச்சு அதான் வேறஒண்ணும் இல்ல” என்று ஒவ்வொரு வார்த்தையாக கூறினாள். அவளை விசித்திரமாக பார்த்து விட்டு,

”சரி சரி இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா க்ரௌண்டுக்கு வந்துடு ஆக்ரால எடுத்த பிக்சர்ஸ்லாம் பிரிண்ட் பண்ணி வந்துடுச்சு. பௌர்ணமி, யமுனை, தாஜ் மூணோட கெமிஸ்ட்ரியும் எப்புடிவொர்க்கவுட் ஆயிருக்குன்னு பார்த்தீனா அசந்துப் போயிடுவ” என்றபடி கண் சிமிட்ட, ஒரு வினாடி தடுமாறி

”இல்ல சூரி எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நான் வரல. நீ ஃபோட்டோஸ் எடுத்துட்டுவா நான் லேப் அவர்ல பாத்துக்குறேன்” என்ற கூறிக் கொண்டே நடக்கஆரம்பித்தாள். “எனிதிங்க் ராங் நாமா கேண்டீன் போலாமா ஜெனி? என்றபடி அவசர அவசரமாக அவளைப் பின்தொடர்ந்தான்.

“  ஒருவாட்டி  சொன்ன உனக்கு புரியாதா ”சட்டென்று திரும்பி கோபத்தில் குரல் உயர்த்த “ஓகே ஓகே  டேக் கேர் ஜெனி அயாம் ஆல்வேய்ஸ் தெர் ஃபார் யூ டோன் ஃபர்கெட்” என்று விட்டு பதில் எதிர்பார்க்காமல் சூர்யா சென்று விட ஜெனிஃபருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது மறுபடியும் அவனைக் கூப்பிட்டு சாரி கேட்க்கலாம் என்று நினைத்தவள் வேண்டாம். அப்புறம் என்ன ஏது என்று துளைக்க ஆரம்பித்து விடுவான்.. மறுபடியும் டென்சனாக வேண்டியிருக்கும் என்று விட்டு விட்டாள்.

லேப் அவரிலும்  அவனுடன் சாதாரணமாக  பேசும் அளவுக்கு மனோ நிலை இல்லாததால் ஃபோட்டோவை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள் அவனும் ஏதோ கேட்க வாயெடுத்துவிட்டு அவளாகவே சொல்லட்டும் என்று விட்டு விட்டான். அதைப் பார்த்து கஷ்டமாக இருந்தாலும் இனி அப்பா மனசு கஷ்டப்படும்படி நடந்துக்ககூடாது என்று தீர்மானித்துக்  கொண்டாள்.

இப்படியாக அந்த வரமும் அதற்கடுத்த வாரமும் ஓடியது.  ஜெனி எல்லரிடமும் நன்றாக பேசினாலும் சூர்யாவிற்கு தெளிவாக புரிந்தது ஏதொ ஒன்று சரியில்லை தன்னைவிட்டு ஜெனி விலகிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனாலும் அவளிடம் கேட்கும் துணிவு அவனுக்கு வரவில்லை ஏனெனில் என்ன தான் நன்றாக பேசினாலும் சில விஷயங்களில் ஜெனியை கட்டாயப்படுத்தினால் மூஞ்சிலடித்ததுப் போல் பதில் சொல்லிவிடுவாள் சோ எதுக்கு பிரச்சினை என்று விட்டு விட்டான்.

ஒரு நாள் மாலை நேரம். க்ரௌண்டுக்கு போய் திரும்பி வரும் வழியில் ஜெனி  நின்றுக்கொண்டிருந்தாள். சூர்யா சந்தோஷமாக “என்ன அதிசயம் காத்து இந்தப்பக்கம் அடிக்குது போல “ என்று விளையாட்டுப் போல் கேள்வி கேட்க ஜெனி அமைதியாக நின்றாள். ஒரு கேள்விக்கு பத்து பதில் சொல்லும் ஜெனியா இப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜெனி ”சரி நான் கிளம்ப்றேன் என்று விட்டு திரும்ப நடக்க துவங்கினாள் ”ஏன் விளையாட வர மாட்டேங்குற ?” என்று கேட்டபடி கூட நடக்க துவங்கினான் ”இல்ல இனி நான் விளையாடற ஐடியா இல்லப்பா” என்று மிக மெதுவான குரலில் கூறினாள் ”ஏன்?” என்று எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில் கேட்டான்.

Thursday, July 28, 2011

உயிர் நி்ரப்பிய உன் பிரியம் - 2

பாகம் 1

கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பிக்க சுற்றிலும் கூட்டம் சேர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் இருவரில் முதலில் வந்தவன் வெளியேற சூர்யா ஜெனியை கைகாண்பித்தான் உடனே மற்றவன், ”,என்ன மிஸ்ஸி, மட்டையா? எனக் கேட்க, ரோஷம் வந்தவளாய் ஜெனிஃபர் முகம் சிவக்க ”நீ போ சூரி ஐ வில் டேக்கேர்” என்றாள். இதைக் கேட்டு அவன் சிரித்தான். சூர்யா மெதுவாக ஜெனிஃபரின் அருகில் வந்து, ”வேண்டாம் ஜெனி, ஆள் முரடன் மாதிரி இருக்கான் நீ கிளம்பு” என  ”இல்ல நான் விளையாடிட்டு தான் வருவேன்” என்று அழுத்தமாக கூறிவிட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள்.

இருவரும் சளைக்காமல் விளையாட ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது ஆளாளுக்கு விசில் அடித்து சத்தம் போட்டு இன்னும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கினார்கள். “என்ன மிஸ்ஸி உனக்கு நிறைய ஃபேன்ஸ் போல” என்று அவன் கேட்க வழிப்பம் காட்டி. “ப்ரேக்” என்றுவிட்டு வந்தாள். ப்ரேக்கில் தண்ணீர் அருந்தவந்தவளிடம், ”ஓக்கே ஜெனி போதும் நீ கிளம்பு” என்று சூரி கூற, ”இருக்கட்டும் இன்னிக்கு  நானா அவனான்னு பாக்கலாம்” என்றாள் ”லூஸு அவங்களாம் நல்ல ப்ளேயர்ஸ் ரொம்ப நாள் விளையாட்ரவங்க அவங்க கூட உன்னால எப்டி முடியும்?” என்று ஆதங்கமாய் கேட்டவனை முறைத்து

”ஹல்லொ நீ வேடிக்கை மட்டும் பாரு மேன்”என்றுவிட்டு மீண்டும் விளையாட துவங்கினாள். பந்தை திருப்பி அடிக்க எத்தனித்த போது அது மிஸ்ஸாகி தலையில் மாட்டியிருந்த கிளிப்பில் பட்டு கிளிப் தெறிக்க சடாரென்று காலையில் ஷாம்பு போட்டு அலசி ட்ரையரில் காயாவைத்த துளி கூட எண்ணைப்பசையற்ற சுருள் கூந்தல் விரிந்து பரவ, என்ன செய்வதென்று ஒரு வினாடி தடுமாறி, அடுத்த நொடி “எக்ஸ்கயூஸ்மி” என்றபடி சட்டென்றுவிட்டு ட்ரெஸ்சிங் அறைக்குள் நுழைந்தாள் ஜெனிஃபர்.

”ச்சே எண்ணை வச்சு பேண்ட் போட்டு வந்துருக்கனும்” என்று முனகிக்கொண்டே கூந்தலை கிளிப் போட்டு விட்டு வெளியேற நினைத்தவள் மொபைலைப் பார்க்க அப்பாவின் மிஸ்டுகால் மஞ்சுவின் மெசேஜ். மஞ்சு எதுக்கு மெசேஜ் பண்ணீர்க்கா என்றெண்ணியபடி மெசேஜைப் பார்க்க ”யுவர்ஸ் டாட் வெயிட்டிங்” என்று டிஸ்ப்ளே ஆனது.“மை காட்” என்றபடி நேரத்தைப் பார்க்க ஒரு மணி நேரத்திற்கும் முன்பாக மெசேஜ் வந்திருந்தது.

போச்சு இன்னிக்கு எவ்ளோ வாங்கி கட்டணுமோ என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சூர்யாவிடம் சொல்லிவிட்டு போகலாம் என கோர்ட் நோக்கி நடந்தவளின் கண்களில் முதலில் பட்டவர் அவளுடைய தந்தை! “டாட். நீங்க... இங்க…” என்று தடுமாற ”வா போகலாம்” என்று விட்டு விறு விறு என்று முன்னால் நடந்தார்.

தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை அவர் இந்த ஒசாமாவிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்றெண்ணியபடி ஜெனிஃபரும் பக்கா கற்பனைகளை செய்துக் கொண்டே வந்தாள் ஆனால் வீடு வந்து சேர்ந்தும் அவளுடைய அப்பா ஒன்றும் பேசாமல் போகவே அவளாகவே “ டாட்  வந்து நான்...”என்று ஆரம்பிக்க கையை உயர்த்தி அவளை நிறுத்தும்படி சைகை காட்டிவிட்டு

“உள்ளூர்லயே நல்ல நல்ல காலேஜஸ் இருந்தும் உன்ன இவ்ளோதூரத்துக்கு அனுப்பி படிக்க வச்சுருக்கேன்ன நீ ஆசைப்பட்டியேங்கிற ஒரே காரணத்துனால தான் ஆனாஇங்க வந்தும் நீ பழைய மாதிரியே ஊர் சுத்துறது, பசங்களோட போட்டி போட்டு வம்படிக்கிறதுன்னு தான் இருக்குற  எத்தனையோ தரம் உன்ட்ட நான் சொல்லிட்டேன் இனியும் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல நீ சின்ன குழந்தையும் இல்ல சொல்லிதான் புரியனும்ங்ற அளவுக்கு. அதனால நீயே முடிவு பண்னிக்கோ நான் வர்றேன்” என்று விட்டு சென்றுவிட்டார்.

(தொடரும்..)

Tuesday, July 26, 2011

உயிர் நி்ரப்பிய உன் பிரியம் - 1


”பால்பொழியும் பௌர்ணமி நிலவில்
யாழ்மீட்டும் யமுனை நதிக்கரையில்
காதல் கசிந்துருகி கட்டிடமாய் உயர்ந்து நிற்கும்
வெண்பளிங்கு மாளிகையை
விழியினால் பருகினாயா?”

ரசனையும் குறும்பும் போட்டி போட கண்ணடித்துக் கேட்டவளை புன்னகையுடன் நோக்கி விட்டு நக்கலடிக்கும் குரலில், ”வாம்மா மின்னல்! மொத்த ஸ்டேடியமும் முக்காடு போட்ருக்கது உன்னால தானா?” என வம்பிழுக்க ”ஆமாம்டா ஆமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழைனு படிச்சதில்லயா? ”என்று திருப்பிக் கொடுத்தாள்.” படிச்சுருக்கேன் படிச்சுருக்கேன் அதுவும் படிச்சுருக்கேன் இன்னோண்ணும் கேள்வி பட்டுருக்கேன் கூடா நட்பு கேடாய் முடியும்னு” என்று மிகுந்த சோகமான குரலில் பாவமாய் கூறியவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே,

ஹா ஹா கேடு முடிஞ்சதா இல்லியா?” என்று குவிஸ் போட்டியில் கேட்பது போன்ற பாவனையுடன் வினவ எப்புடி முடியும் அதன் மனுஷ ரூபத்துல வந்து நிக்கிறியே என்று கடுப்படித்தான் ஏன் சார் கேட்ட கைத்தட்டி கூப்புடுரீங்க? கால் பண்ணி கூப்ட்ரீங்க?” என்று பதிலுக்கு அவளும் கடுப்பாக ம்ம் ஊத்துற மழையில ஒலிம்பிக்தீபம் அணைஞ்சுப்போச்சம் வெளெக்கேத்த ஒரு வெளக்கெண்ண வேணும்னாங்க அதன் கூப்பிட்டேன் ஆளப்பாரு  என்றபடி நடக்க ஆரம்பித்தான். சட்டென்று அவனைப்பிடித்து நிறுத்தி

அப்டிங்களா சார் வெளக்கெண்ண வேலுமாணிக்கம் கடைல விக்குதாம் போய் வாங்கிகோங்க நான் கிளம்பறேன் என்றபடி திரும்பி நடக்க ஆரம்பித்தாள் ஓய் வெட்டி பந்தா வேலைக்காகாது போ போய் ரெடியாகு. இன்னிக்கு புதுசா ரெண்டு பேரு கோர்ட்ல வந்து நிக்கிறாங்க அவங்கள்ட்ட உன் வீரத்த காமி போ” என்றவாறு அவளுடைய கையில் இருந்த ராக்கெட்டை வாங்கிக் கொண்டு ட்ரெஸ்சிங் அறையை நோக்கித் தள்ளினான்.

இருடா இரு டைனோசர்க்கு டிஜிட்டல்னா அனகொண்டாவுக்கு அனிமேஷன் அப்ப இருக்கு உனக்கு கதம் கதம் என்றுக் கறுவிக்கொண்டே நடக்க, போ போ போய்ட்டே இரு சீனோட்டி சிண்ட்ரெல்லா என்று பரிகசித்தான் ”சீ பே” என்றவாறு மறுபடியும் அவனை நோக்கித் திரும்ப

”ஜெனிஃபர், சூர்யா ரெண்டு பேரும் இங்க என்ன பண்றிங்க?” என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டனர் அங்கு நின்றுக்கொண்டிருந்த கோச்சைப் பார்த்து இருவரும் அசடு வழிய ”நத்திங் மாஸ்டர் ஜஸ்ட் டெக்னிக் டிஸ்கஷன் இல்லியா சூரி” ” ஆமாம் மாஸ்டர் ஜெனி சொல்றது நிஜம்தான் மாஸ்டர்” என்று உளரி கொட்டினர். அவரும் சிரித்தபடி, "போங்கப்பா  நெட் ப்ராக்டீஸ்க்கு டைம் ஆச்சு கெட் ரெடி” என்று விட்டு அகன்றார்.

இருவரும் சிரித்தபடி கிளம்பினர். கோர்ட்டுக்கருகில் வந்தவுடன், “என்னடா நீயும் நானும் மட்டும் தான?இன்னிக்கு யாரோ வந்துருக்காங்கன்னு பில்டப் குடுத்த” எனக் கேட்க பின்னாலிருந்து, ”ஹாய் நாங்களும் வரலாமா?” என்றபடி ஒருவன் வந்து நின்றான். சூர்யா திரும்பி ஜெனிஃபரைப் பார்க்க, அவள் ”ஓக்கே” என்றாள்.“பட் மூணு பேரு தானே இருக்கிறோம் எப்படி டபுள்ஸ்?....”என்று இழுத்தபடி கேட்க “வெயிட் எ மின் ப்ளீஸ்” என்றுவிட்டு ”ஹேய் டான் கமான் கிம்மி எ ஹேண்ட்” என்று கூப்பிட, டான் என்று அழைக்கபட்டவன் அங்கிருந்து எழுந்து வந்தான். ஜெனிக்கு அப்பொழுது தெரிந்து இருக்கவில்லை இவன் அவள் வாழ்க்கையை புரட்டி போட வந்தவன் என்று.

(தொடரும்..)